தென்காசியில் காவல்துறையினருக்கு இலவச மருத்துவ முகாம்
தென்காசி மாவட்டம் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பாக காவல்துறையினருக்கு இலவச மருத்து முகாம், நடைபெற்றது
HIGHLIGHTS
தென்காசியில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பாககாவல்துறையினருக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
தென்காசியில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்காக கோடைகால நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் தென்காசி தைக்கா தெரு அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இம்முகாமில் கலந்துகொண்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மதுமேகம்,உயர் இரத்த அழுத்த நோய்க்கான பரிசோதனைகள் செய்யப்பட்டன.மேலும் அவர்களில் நல்வாழ்விற்காக, ஆயுஷ் மருந்துகளும், நோய்த் தடுப்பிற்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டது.மேலும் ஆயுஷ் மருத்துவத்தின் சிறப்புகள் பற்றிய பதாகைகள், யோகா பயிற்சி, மூலிகை கண்காட்சி,மருந்து செய் மூலப்பொருள்கள்
ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு,கோடைகால நோய்த்தடுப்பு விளக்க பிரசுரங்கள் விநியோகப்படுத்தப்பட்டது.மேலும் தாகசமணி(ஆயுர்வேதா) ,தடியங்காய் சாறு, பானகம்,ப்ரி பயோடிக் புரோபயோடிக் சாறுகள் ( யோகா) மற்றும் கபசுர குடிநீர் (சித்தா)ஆகியவை வழங்கப்பட்டு இவைகளின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
இம்முகாமில் ஆயுர்வேத மருத்துவர்கள் தஹரிஹரன்,முகமது சலிம், யோகா மற்றும் இயற்கை மருத்துவர் மேனகா, சித்த மருத்துவர்கள் செல்வகணேசன், தேவி, ஞான பொன்மலர், ஹோமியோபதி மருத்துவர் கிறிஸ்டி ஆகிய மருத்துவர்களும் மருந்தாளுநர்கள் நாகராஜன் மற்றும் உஷா ஆகியோர் கலந்துகொண்டு காவல் துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்