/* */

சுரண்டையில் காங்கிரஸ் கட்சி இணையவழி மூலம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

சுரண்டையில் காங்கிரஸ் கட்சி இணையவழி மூலம் உறுப்பினர் சேர்க்கை முகாம் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் நடைபெற்றது

HIGHLIGHTS

சுரண்டையில்  காங்கிரஸ் கட்சி இணையவழி மூலம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
X

சுரண்டையில் நடைபெற்ற காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை முகாம்

தென்காசி மாவட்டம் சுரண்டையில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இணையவழி மூலம் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும் தென்காசி எம்எல்ஏவுமான பழனி நாடார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முரளிராஜா முன்னிலை வகித்தார். சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ஆஸ்கார் பிரடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் இணையவழி மூலம் உறுப்பினர் சேர்ப்பது, கிராமப்புறங்களில் அதிகமான உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், வர்த்தக காங்கிரஸ் சுப்பிரமணியன், நகர காங்கிரஸ் தலைவர்கள் காதர் மைதீன், ஜெயபால் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 20 March 2022 12:00 PM GMT

Related News