/* */

சங்கரன்கோவில் தொகுதியில் வாக்கு பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்கு பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் 274 வாக்குச் சாவடிகள்,91 துணை வாக்குச் சாவடிகள் என மொத்தம் 365 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன..

வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்களான 438 கண்ட்ரோல் யூனிட் பேலட் இயந்திரங்கள் மற்றும் 478 விவிபேட் இயந்திரங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனி அறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன.

சில் வைக்கப்பட்டிருந்த அறையை கோட்டாட்சியர் முருகசெல்லி அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறந்தார்.

இதைத்தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கியது. இதற்காக அலுவலகத்தில் மண்டல துணை தேர்தல் அலுவலர் உள்ளிட்ட தலா 3 பேர் வீதம் 27 மேசைகள் போடப்பட்டு சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.

தேர்தல் நடத்தும் அலுவலர் முருகசெல்வி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் மாரியப்பன் மற்றும் திமுக சார்பில் நகரச் செயலாளா சங்கரன், வழக்குரைஞர் அன்புச்செல்வன், போ.சங்கர், அமமுக சார்பில் வைரமுத்து, உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சின்னம் பொருத்தும் பணியை பார்வையிட்டனர்.

Updated On: 27 March 2021 5:36 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது