/* */

சிவகங்கை பேருந்து நிலையத்தில் பேருந்து மோதி நிழற்கூரை தூண் சேதம்

சிவகங்கை பேருந்து நிலையத்தில் பஸ் மோதி நிழற்கூரை தூண் சேதமடைந்ததால் மேற்கூரை பணிகளை முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

சிவகங்கை பேருந்து நிலையத்தில் பேருந்து மோதி நிழற்கூரை தூண் சேதம்
X

பேருந்து மோதியதில் சேதமடைந்த இரும்புத்தூண்.

சிவகங்கை பேருந்து நிலையத்தில் மதுரை-மானாமதுரை செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் எம்எல்ஏ தொகுதி நிதியிலிருந்து நிழற்கூரை அமைப்பதற்காக ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

இதன்படி, பேருந்துகள் நிழலில் நின்று செல்ல வழிவகை செய்வதாக தெரிவித்தனர். இதற்காக நல்ல நிலையில் இருந்த காங்கிரீட் தளத்தை உடைத்து சேதப்படுத்தினர். பின்னர் தூண்கள் அமைத்து பல மாதங்களாகியும் கூரை, காங்கிரீட் தளம் அமைத்தல் போன்ற எந்த பணிகளும் நடக்கவில்லை.

இதனால், கோடை வெயிலின்போது பேருந்து நிலைய வளாகம் புழுதியைக் கிளப்பும் இடமாகவும், மழைக்காலங்களில் சகதி காடாக காட்சி அளிக்கிறது.

இந்நிலையில் அரசு பஸ் ஒன்று மோதியதில் காங்கிரீட் தூண்களும், இரும்பு தூண்களும் சேதமானது. இனிவரும் காலங்களில் பெரிய தூண்களும் சேதம் ஆவதற்கு முன்னரே மேற்கூரையை முழுமைபடுத்த நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 18 Aug 2021 11:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  3. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  4. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  5. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  6. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  7. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  9. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  10. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்