தந்தையுடன் 30 கிலோ மீட்டர் ஓடி உலக சாதனை படைத்த 6 வயது குழந்தை
தனது மகனுக்கு ஒலிம்பிக் பதக்கத்தை வெல்ல சிறந்த பயிற்சியாளர் தேவை என தந்தை தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்
HIGHLIGHTS
சிவகங்கையில் உடற்பயிற்சி அவசியத்தை வலியுறுத்தி தந்தையுடன் 6வயது குழந்தை 30கிலோ மீட்டர் உலக சாதனை படைக்கும் ஒட்டபயற்சி . எனது மகனுக்கு ஒலிம்பிக் பதக்கத்தை வெல்ல சிறந்த பயிற்சியாளர் தேவை அரசுக்கு தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒமைக்ரான் தொற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும் தினமும் உடற்பயிற்சி செய்வதன் அவசியத்தை வலியுறுத்தும் எண்ணத்திலும் சிவகங்கையில் தந்தையும் மகனும் 30 கி.மீ ஓடி புதிய சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சி வெற்றி பெற்று உள்ளனர் இன்று காலை அரண்மனை வாசலில் அதிகாலை 5மணிக்கு தொடங்கிய விழிப்புணர்வு ஒட்டபயிற்சியை திமுக மாவட்ட துணைச்செயலாளர் மணிமுத்து மற்றும் மெளரியார் புத்தா உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர்.
தற்போது உலகமெங்கும் பரவி வரக்கூடிய ஒமைக்ரான் தொற்று நோயிலிருந்து பொது மக்கள் எவ்வாறு பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும் 6 வயதான (கணீஸ் சிவசாஸ்தா) தனது தந்தை (சிவகுமார்) இணைந்து 30 கிலோ மீட்டர் தூரம் ஓடி சாதனை படைத்தார். உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம்மை பாதுகாத்து கொள்ளுவது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்திய இந்த சிறுவன் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். முன்னதாக நேருபாஜர்,அரசுமருத்துவகல்லுரி ரோடு,சிவகங்கை மேலூர் ரோடு சுந்தர நடப்பு,கோர்ட வாசல் வழியாக காந்தி பூங்காவில் வந்து ஓட்டம் நிறைவடைந்தது. சிறுவனை வரவேற்றனர்.
பின்னர் சோழன் புக் ஆப் நிறுவனத்தின் நிர்வாகி நிமலன் சான்றிதழ் வழங்கினாரி. 6வயது சிறுவனை பாராட்டி திமுக மாவட்ட செயலாளர் மணிமுத்து கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். சிறந்த தந்தைக்கான விருதும் சிறுவனின் தந்தைக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து அவர் தந்தை கூறுகையில், எனது மகனுக்கு வருங்காலத்தில் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வெல்ல அரசு ஒரு சிறந்த பயிற்சியாளரை நியமித்து உதவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.