மக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்களிடமிருந்து 305 மனுக்கள் பெற்றப்பட்டன
மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல் .
HIGHLIGHTS
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 305 மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் .
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் பெற்று, மனுக்கள் தொடர்பாக மனுதாரர் முன்னிலையில் விசாரணை செய்ததுடன், மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை சிறப்பு கவனம் எடுத்து உரிய நலத்திட்டங்களை உடனுக்குடன் வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் பொது மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று மனுக்கள் மீது தீர்வு காணும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர் அலுவலகத்தில் வழங்கியதுடன் மேலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா ,சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை கூறுதல், வங்கி கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் 305 கோரிக்கை மனுக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்டது.
மனுக்கள் மீது அலுவலக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நடவடிக்கைகள் தொடங்க மக்களுக்கு உரிய விவரத்தை மனுதாரர்கள் தெரிவித்து, அவர்களின் அலைச்சலைத் தவிர்க்க வேண்டுமெனவும், அதேபோல் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது கவனம் செலுத்து விரைந்து நடவடிக்கை வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி உத்தரவிட்டார்