/* */

காணாமல் போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் காணாமல் போய் மீட்கப்பட்ட 54 செல்போன்களை எஸ்பி தீபாசத்தியன் உரியவர்களிடம் ஒப்படைத்தார்

HIGHLIGHTS

காணாமல் போன செல்போன்கள் உரியவர்களிடம்  ஒப்படைப்பு
X

இராணிப்பேட்டை மாவட்டத்தில் காணாமல் போன  54 செல்போன்களை எஸ்பி தீபாசத்தியன் உரியவர்களிடம்   வழங்கினார்

இராணிப்பேட்டை மாவட்டத்தில்செல் காணாமல் போனது குறித்து போலீஸார் பெறப்பட்ட புகார்களின் பேரில் அவற்றை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

எஸ்பி தீபாசத்தியன் அறிவுறுத்தலின் பேரில் காவலர்கள் ராஜ்குமார், ஐஸ்வர்யா இருவரும் காணாமல் போன செல்போன்களை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டனர்.

அதில் அவர்கள் சுமார் ரூ 8 லட்சம் மதிப்புள்ள 54 செல்போன்களை மீட்டனர். பின்னர், அவற்றின் உரிமையாளர்கள் குறித்து உறுதி செய்யப்பட்டதையடுத்து உரியவர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் எஸ்பி தீபாசத்தியன் கலந்துகொண்டு 54 செல்போன்களை உரியவர்களிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் சைபர்கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் முத்துக் கிருஷ்ணன் உடனிருந்தார்.

ஏற்கனவே இராணிப்பேட்டை மாவட்டத்தில் காணாமல் போன சுமார் 6 லட்சம் மதிப்புள்ள 50 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கபட்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 6 Dec 2021 12:20 PM GMT

Related News