/* */

காவேரிப்பாக்கம் அருகே லாரி விபத்து: ஒருவர் பலி

காவேரிப்பாக்கம் அருகே சுமைதாங்கி கூட்டுறவு வங்கியருகே சாலையோரமாக நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் கிளினர் பலி

HIGHLIGHTS

காவேரிப்பாக்கம் அருகே லாரி விபத்து: ஒருவர் பலி
X

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சக்கர்நாதசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஜயரங்கன்,36, எலக்ட்சியன் வேலை செய்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி இருந்த நிலையில் ஓசூரிலிருந்து சென்னைக்கு செங்கல் லோடு ஏற்றிச்செல்லும் லாரி ஒன்றில் கிளினர் வேலைப் பார்த்து வந்தார்.

இந்நிலையில் வழக்கம் போல லாரியில் ஒசூருலிருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அதிகாலை சுமைதாங்கியருகே உள்ள கூட்டுறவு வங்கி எதிரே லாரி வந்த போது, டிரைவர் தூக்ககலக்கத்தில் சாலையோரமாக நின்றிருந்த மற்றொரு லாரியின் பின்னால் மோதினார். இதில் செங்கல் ஏற்றி வந்த லாரியில் இடது புறமாக அமர்ந்து வந்த கிளினர் விஜயரங்கன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

#Instanews #Tamilnadu #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #இராணிப்பேட்டை #காவேரிப்பாக்கம் #விபத்து #கிளீனர்பலி #Ranipet #Kaveripakkam #Accident #Cleaner #died #lorry #road

Updated On: 4 Jun 2021 10:08 AM GMT

Related News