Begin typing your search above and press return to search.
வழிதவறி ஊருக்குள் வந்த மானை காப்பாற்றிய மக்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு மோட்டூர் காப்புக்காட்டிலிருந்து வழிதவறி ஊருக்குள் வந்த மானை மீட்ட பொது மக்கள், அதை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
HIGHLIGHTS
வாலாஜாப்பேட்டை வன்னிவேடு மோட்டூர் குடியிருப்பு பகுதிக்குள் காப்புக்காட்டிலிருந்து அதிகாலை 3 வயது மதிக்கத்தக்க பெண் மான் ஒன்று வழிதவறி வந்துள்ளது. இந்த மானை அந்த பகுதியில் உள்ள நாய்கள் கடிக்க முயன்றதை கண்ட அப்பகுதி மக்கள் மானை நாயிகளிடமிருந்து மீட்டதோடு, வாலாஜாப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை சரக வனத்துறையினர் மானை மீட்டதோடு காப்புக்காடு பகுதிக்குள் சென்று விட்டனர்.