/* */

பேருந்து வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

பேருந்து வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
X

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா, முசிறியை அடுத்த ராமாபுரம் கிராம மக்கள், அரசு பேருந்து ராமாபுரம் வரை நின்று செல்ல பேருந்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து கிராம பொதுமக்களிடம் கேட்ட போது, ராமாபுரம் கிராமத்தில் விவசாயிகள் அதிகமாக வசித்து வருகின்றனர். இங்கு விளையும் கீரை, முள்ளங்கி போன்ற அத்தியாவசிய காய்கறிகளை எடுத்து சென்று வியாபாரம் செய்வதற்கும் இந்த கிராமத்தில் படிக்கும் மாணவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று வருவதற்கும், மருத்துவமனைக்கு சென்று வருவதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே வழி தடம் எண் 21, அரசு பேருந்தை ஒவ்வொரு முறையும் ராமாபுரம் வரை வந்து செல்ல அரசு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனால் நாங்கள் பேருந்து ராமாபுரம் வந்து செல்ல இந்த சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ராமாபுரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் புருஷோத்தமன் தலைமையில் சுமார் 200 பேர் சாலை மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இத்தகவல் அறிந்து விரைந்து வந்த வாலாஜா போலீசார் அந்த கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வாக்குறுதி அளித்து சமரசம் செய்து பொது மக்களை அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On: 17 Feb 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு