தனுஷ்கோடி கோரப்புயலில் உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி
தனுஷ்கோடியில் கோரப்புயலில் உயிரிழந்தவர்களுக்கு கடற்கரையில் பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
HIGHLIGHTS
1964ம் ஆண்டு தனுஷ்கோடியில் கோரப்புயலில் உயிரிழந்தவர்களுக்கு தனுஷ்கோடி கடற்கரையில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1964ம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி நள்ளிரவு திடீரென வீசிய கோர புயலில் சிக்கி தனுஷ்கோடி பகுதியில் வாழ்ந்து வந்த மீனவர்கள், பொதுமக்கள், அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் புயலில் சிக்கி உயிரிழந்தனர்.
அவர்கள் உயிர் இழந்து இன்றுடன் 57 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இறந்தவர்களை நினைவு கூரும் விதமாகவும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி மோட்ச தீபம் ஏற்றி, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட படையல்களை கடலில் விட்டனர்.