/* */

நாய் குரைத்ததால் கொலை..! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

நாய் குரைத்ததால் கொலை, குற்றவாளிக்கு ஆயுள். இராமநாதபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு.

HIGHLIGHTS

நாய் குரைத்ததால் கொலை..! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
X

இராமநாதபுரம் பாம்பன் ஜெயில் தெருவை சேர்ந்த மீனவர் மார்டின் மகன் சந்தியாரெனி 21, கடந்த 2013ம் ஆண்டு இவரது வீட்டின் வழியாக அதே பகுதியை சேர்ந்த டேனி, பிச்சை இருவரும் சென்றுள்ளனர். அப்போது சந்தியாரெனி வீட்டில் வளர்த்துவந்த நாய் குரைத்துள்ளது. இதனால். ஆத்திரமடைந்த இருவரும் அன்று மாலை சந்தியாரெனி வீட்டில் இருந்த போது தகராறில. ஈடுபட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நிலையில் மதுரை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மூன்று நாட்கள் மருத்துவ மனையில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து பாம்பன் போலிசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த ஒன்பது வருடங்கள் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் நேற்று கூடுதல் அமர்வு நீதிபதி சீனிவாசன் தீர்ப்பு வழங்கினார். அதில். குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 8 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். நாய் குரைத்ததால் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Updated On: 13 April 2022 5:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  7. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  8. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  9. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்