இராமநாதபுரம் திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளருக்கு பசுமை விருது
திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளரான முகமது சலாவுதீனுக்கு சுற்றுச்சூழலுக்கான பசுமை விருது வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் நாட்டின் குடியரசு தினத்தையொட்டி 73 மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. கோட்டாட்சியர் ஷேக் மன்சூர் தொடங்கி வைத்தார்.
வட்டாட்சியர் முருகேசன், மண்டல துணை வட்டாட்சியர் பழனிக்குமார், தலைமையிட வட்டாட்சியர் மீனாட்சி சுந்தரம், முதுநிலை வருவாய் ஆய்வாளர் காசிநாததுரை, வருவாய் ஆய்வாளர்கள் சரவணக்குமார், பார்கவி, பகவதி, தலைமை நில அளவை சொக்கநாதன், கிராம நிர்வாக அலுவலர் (ஓய்வு) மலைமேகம், திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் முகமது சலாவுதீன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 4 ஆண்டுகளில் குறுங்காடுகள் மற்றும் பசுமை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்திய அறம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனரும், திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளருமான முகமது சலாவுதீனுக்கு சுற்றுச்சூழலுக்கான பசுமை கேடயத்தை ராமநாதபுரம் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர் வழங்கினார்.
பொதுமக்களுக்கு சிறப்பாக பணியாற்றிய சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் தொழிலதிபர் கஜேந்திரன், தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கே.ஆர்.டி கிருஷ்ணமூர்த்தி, இளம் சாதனையாளர் இன்ஜாப் முகமது, தலைமை நில அளவையர் சொக்கநாதன், வருவாய் ஆய்வாளர்கள் பார்கவி, பகவதி, கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித், தைக்கா அப்துல் ஒபுர் ஆகியோர் வருவாய் துறை சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.