இராமேஸ்வரத்தில் திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை
இராமேஸ்வரத்தில் திமுக பிரமுகர் வீட்டில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத் துறையினர் தீவிர சோதனை.
HIGHLIGHTS
இராமேஸ்வரம் அங்காள ஈஸ்வரி கோவில் பகுதியில் திமுக பிரமுகர் வில்லாயுதம் என்பவர் வீடு உள்ளது. இவர் திமுகவின் மாவட்ட மீனவர் அணி செயலாளர் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட கடல் அட்டையை பதுக்கி வைத்து இலங்கைக்கு கடத்த முற்பட்டதாக காவல்துறையினர் கைது செய்தனர்.
இராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது, எந்த முறையில் இவருக்கு வருமானம் வந்தது என்பது குறித்தும், முறையாக வருமான வரி செலுத்தாதது உள்ளிட்ட புகார்கள் குறித்து மதுரை அமலாக்கத் துறையினருக்கு ரகசிய புகார் வந்துள்ளது.
இதையடுத்து இன்று வில்லாயுதம் என்பவர் வீட்டிற்கு வந்த 8 பேர் கொண்ட அமலாக்கத் துறையினர் மற்றும் 25க்கும் மேற்பட்ட போலீஸார் 2 மணி நேரத்திற்கு மேலாக அவரது வீடு, விடுதி மற்றும் அவரது தோட்டத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.