/* */

உலக ஓசோன் தினம்: புதுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடவு

உலகஓசோன் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் அனைவரும் காற்றை மாசுபடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது

HIGHLIGHTS

உலக ஓசோன் தினம்: புதுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  மரக்கன்று நடவு
X

உலக ஓசோன் தினத்தையொட்டி புதுக்கோட்டை ராணியார் மகளிர் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழா.

புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உலக ஓசோன் தின விழா முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவில்புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி வளாகங்களில் மரக்கன்றினை நட்டு வைத்தனர்.

உலக ஓசோன் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் அனைவரும் காற்றை மாசுபடுத்தும் விதத்தில் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. அனைவரும் மரக்கன்று களை நட்டு காற்றை மாசுபடுத்தாமல் இருப்பதற்கான நடவடிக்கையை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என உலக ஓசோன் தின விழாவில் ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் எடுத்துக் கூறினர். ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரெங்கராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


Updated On: 16 Sep 2021 10:23 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!