/* */

பாஜக ஊழல் பட்டியல் வெளியிடுவதால் எங்களுக்கு எந்த பயமும் இல்லை: அமைச்சர் ரகுபதி

ஜூன் 3 ம் தேதி பிறந்த இரட்டைக் குழந்தைகள் உள்ளிட்ட 23 குழந்தைகளுக்கு ஒரு கிராம் மோதிரம் அமைச்சர் ரகுபதி வழங்கினார்

HIGHLIGHTS

பாஜக ஊழல் பட்டியல் வெளியிடுவதால் எங்களுக்கு எந்த பயமும் இல்லை: அமைச்சர் ரகுபதி
X

புதுக்கோட்டையில்  பிறந்த 23 குழந்தைகளுக்கு ஒரு கிராம் மோதிரத்தை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரண்டு அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடுவதால் எங்களுக்கு எந்த பயமும் இல்லை.ஏனென்றால், மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. என்றார் அமைச்சர் ரகுபதி.

புதுக்கோட்டையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே .கே.கே .செல்லப்பாண்டியன் ஏற்பாட்டில் ஜூன் 3 ம் தேதி பிறந்த இரட்டைக் குழந்தைகள் உள்ளிட்ட 23 குழந்தைகளுக்கு ஒரு கிராம் மோதிரத்தை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: ஆன்லைன் ரம்மி லாட்டரி உள்ளிட்டவற்றை ஒழிக்க வேண்டியதில் இபிஎஸ் ஓபிஎஸ் -ஐ விட எங்களுக்கு அக்கறை அதிகம், காவல்துறை ஐபிசி படி தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஆன்லைன் ரம்மி தொடர்பான சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு தற்போது அது நிலுவையில் உள்ளது. எனவேதான் புதிய சட்டம் கொண்டு வரவில்லை, ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட சட்டம் நீதி மன்றத்தில் உள்ளதால் அதிலேயே சிறந்த முறையில் வாதாடி நிச்சயமாக நிறைவேற்றி விட முடியும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது என்ற காரணத்தால்தான் மேல்முறையீடு செய்துள்ளோம், எந்தப் பகுதிகளிலும் ஆன்லைன் சூதாட்டங்கள் நடந்தாலும் காவல்துறையினர் அதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்தியாவிலேயே பாஜக போன்ற அசிங்கமான அரசியல் கட்சி இல்லை என்பதற்கு அவர்கள் உதாரணமாக நேற்று முன்தினம் புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தில் நடந்து கொண்டனர், அதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடி ப்படையில், புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடினர்.

அதற்கு பாஜகவைச் சேர்ந்த 5 வழக்கறிஞர்கள் வெளியில் உள்ள நபர்களை அழைத்து வந்து இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டனர். காவல்துறையினர் இதற்கு வழக்கு பதிந்து இருக்க வேண்டும்.ஆனால் காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப் பதிய வில்லை மெத்தனமாக செயல்பட்டனர்.

மத்தியில் ஆட்சி அதிகாரம் அவர்களுக்கு இருப்பதால் தமிழகத்தில் ஏதேனும் சட்ட ஒழுங்கை ஏற்படுத்தி பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்று பாஜகவினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்,ஆனால் அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறாது அது பகல் கனவாகவே போகிவிடும். புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெற்ற சம்பவத்தில் வழக்கறிஞர் சங்கம் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அரசு அதற்கு துணை நிற்கும்.

கடந்த ஆட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் இருந்தது அனைவ ருக்கும் தெரியும். அப்போது ஒருவரது குடோனில் சோதனை நடத்தி அதில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பதெல்லாம் வெளிச்சத்திற்கு வந்தது அது அனைவருக்கும் தெரியும்.தற்போதுள்ள ஆட்சியில் எந்த அளவுக்கு குட்கா உள்ளிட்ட பொருட்களை தடுக்க முடியுமோ அந்த அளவுக்கு தடுத்துக் கொண்டுதான் உள்ளோம்.

இருப்பினும் வெளிமாநிலங்களிலிருந்து திருட்டுத்தனமாக குட்கா உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள் அதையும் முடிந்த அளவு தடுத்து கொண்டு தான் இருக்கிறோம். கஞ்சா விற்பனையை முடிந்தளவு கட்டுப்படுத்தி அது இல்லை என்ற நிலையை கொண்டுவர தமிழக காவல் துறை செயல்பட்டு வருகிறது. அண்ணாமலை இரண்டு அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடுவதாக கூறியதற்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்று தெரிவித்தார் அமைச்சர் ரகுபதி.

Updated On: 4 Jun 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு