/* */

திருமயம்- ஆலங்குடியில் புதிய அரசு கல்லூரிகள: முதலமைச்சர் ஸ்டாலின் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்- ஆலங்குடியில் புதிய அரசு கலை,அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

HIGHLIGHTS

திருமயம்- ஆலங்குடியில் புதிய அரசு கல்லூரிகள: முதலமைச்சர் ஸ்டாலின்  திறப்பு
X

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, புதுகை எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் புதிய அரசு கலைக்கல்லூரியை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்த சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி

திருமயம்- ஆலங்குடியில் புதிய அரசு கலை,அறிவியல் கல்லூரிகளை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று (7.7.2022) நடைபெற்ற நிகழ்வில் 2021-22 மற்றும் 2022-23ஆம் ஆண்டுகளுக்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தவாறு 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

2021-2022 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின்போது, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும், மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியிலும், 2022-2023 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின்போது, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஆகிய இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, புதிதாக தொடங்கப்பட்டுள்ள திருமயம் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஆலங்குடி புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆலங்குடி சந்தைபேட்டை தொழில்பழகுநர் பயிற்சி நிலைய கட்டடத்திலும், நடப்பு கல்வியாண்டு மாணவ, மாணவியர்கள் சேர்க்கை நடைபெற்று பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளுடன்கூடிய, தற்காலிக கட்டடங்களில் செயல்படவுள்ளது.



அதனடிப்படையில் முதலமைச்சரால் (07.07.2022) புதியதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள திருமயம் மற்றும் ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடக்க விழாவில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி திருமயத்திலும், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆலங்குடியிலும் பங்கேற்று தற்காலிக கட்டடங்களில் இயங்கிவரும் கல்லூரிகளில், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு முன்னிலையில் குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சரால் உயர்கல்வியினை அனைவரும் பெறும் வகையிலும், சமத்துவம் மற்றும் சமூகநீதிக்கு உட்பட்டு அனைத்து பிரிவினரையும் கல்வியின் எல்லைக்குள் கொண்டு வரும் வகையிலும், கொள்கைகள் வகுக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இலவச கல்வித் திட்டம், முதல் தலைமுறை பட்டதாரி சலுகைகள், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணாக்கர்களுக்கு நிதியுதவி போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது என அமைச்சர்கள் பேசுகையில் குறிப்பிட்டனர்

இந்நிகழ்ச்சிகளில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், திருமயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு(எ)சிதம்பரம், கல்லூரி முதல்வர்கள் நாகராஜன் (திருமயம்), எஸ்.சேதுராமன் (ஆலங்குடி), முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் துரைராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 7 July 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு