/* */

புதுக்கோட்டையில் அகழ்வராய்ச்சி: முதல் கட்ட பணி வரும் 30-ஆம் தேதியுடன் நிறைவு

புதுக்கோட்டை அருகே பொற்பனைக் கோட்டையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் பண்டைய கால பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

HIGHLIGHTS

புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் முதல்கட்ட அகழ்வராய்ச்சி பணி வரும் 30 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் பண்டை கால நாகரிகத்தை பறைசாற்றும் பல்வேறு விதமான மணிகள் நவரத்தினக் கற்கள் பானை ஓடுகள் பல்வேறு விதமான எலும்புத்துண்டுகள், சட்டிகள் பானைகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது இவை எத்தகைய நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது ஆய்வுக்கு பின்னர் தெரிய வரும்.புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் கடந்த இரண்டு மாத காலமாக அகழ்வாராய்ச்சி பணி, தமிழக தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் மூலமாக நடைபெற்று வருகிறது. அகழ்வாராய்ச்சி பணி சுமார் 15 அடிக்கும் ஆழத்துக்குக் கீழ் வரை அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில், இன்று நடைபெற்ற அகழாய்வின்போது மண்ணுக்குள் புதையுண்டு இருந்த பண்டை காலத்து நாகரிகத்தை பறைசாற்றும் மண் சட்டிகள் பானைகள் ஆகியவை உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இவை எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது குறித்து ஆய்வுக்கு பின்னர் தெரிய வரும்.

மேலும், தமிழக அரசு உத்தரவுப்படி முதல் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் வரும் 30 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. மீண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 24 Sep 2021 5:49 AM GMT

Related News