/* */

புத்தகத்திருவிழா:மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு திருக்குறள் நூல் பரிசு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூலை 29 -ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது

HIGHLIGHTS

புத்தகத்திருவிழா:மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு திருக்குறள் நூல் பரிசு
X

புதுக்கோட்டை புத்தகத்திருவிழா குழுசார்பில் அரசு ராணியார் மருத்துவமனையிவ் பிறந்த குழந்தைகளுக்கு திருக்குறள் நூலை பரிசளிக்கிறார், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு

புத்தகத்திருவிழா நடைபெறும் நாள்களில் பிறந்த குழந்தைகளுக்கு திருக்குறள் நூல் பரிசளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூலை 29 -ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தும் வகையில், புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த 28 குழந்தைகளுக்கு இன்று 5.8.2022 அரசு ராணியார் மருத்துவமனையில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழாக்குழு சார்பில் திருக்குறள் நூலை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பரிசளித்தார்.

இந்த நிகழ்வில் கோட்டாட்சியர் கருணாகரன், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மு. பூவதி, நிலைய மருத்துவ அலுவலர் இந்திராணி, கவிஞர் தங்கம் மூர்த்தி, மருத்துவர். வீ.சி.சுபாஷ்காந்தி, ஆராய்ச்சியாளர் ராஜ்குமார், கவிஞர் முருகேஷ், அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர் வீரமுத்து, இயக்க உறுப்பினர் மணவாளன், ஜெயபாலன், பேராசிரியர் விஸ்வநாதன், ஆசிரியை கீதா, ஆசிரியை கீதாஞ்சலி மஞ்சன், புத்தக விழாக்குழு சதாசிவம் ,அறிவியல் இயக்கம் மற்றும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்

Updated On: 5 Aug 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!