/* */

பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 22.03.2021 அன்று வழக்கு பதியப்பட்டு குழந்தையின் தந்தை மாரிமுத்து கைதுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது

HIGHLIGHTS

பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் தீர்ப்பு
X

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 7 ஆண்டு கடுங்காவல் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் அருகே உள்ள வாத்திராமேடு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் தன்னுடைய 6 வயது பெண் குழந்தைக்கு வீட்டில் இரவு நேரத்தில் தூங்கும் பொழுது பாலியல் துன்புறுத்தல் செய்தாராம்.

இது தொடர்பாக 7 வயது குழந்தையின் தாய் நாகலட்சுமி, கீரனூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் கடந்த 22.03.2021 அன்று வழக்கு பதியப்பட்டு குழந்தையின் தந்தை மாரிமுத்து கைதுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி டாக்டர் சத்தியா, பெற்ற மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த சிறுமியின் தந்தை மாரிமுத்துக்கு 7 வருடம் கடுங்காவல் தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.மேலும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை என தீர்ப்பளித்தார்.

Updated On: 14 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  4. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  7. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  10. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்