முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் முகக்கவசம் குறித்து விழிப்புணர்வு
புதுக்கோட்டை காய்கறி மார்க்கெட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக முகக்கவசம் அணிந்து கொரோனா தடுப்பை ஏற்படுத்துவது குறிதது விளக்கம் அளிக்கும் காணொலி காட்சி காட்டப்பட்டது.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் அனைவரும் முக கவசத்தை முழுமையாக முறையாக அணிய வேண்டும் என்பது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு காணொலிக் காட்சியை நேற்று வெளியிட்டார்
அதில் மூக்கு மற்றும் வாய் முறையாக மறைத்து முக கவசத்தை அணியவேண்டும் தாடை பகுதிகளில் முகக் கவசத்தை அணிந்து கொள்ளக் கூடாது தற்போது மருத்துவர்கள் அறிவுரையின்படி இரண்டாவது அலை மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதால்
அந்த கொரோனா என்ற தொடர் சங்கிலியை உடைத்தால் மட்டுமே நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியும் அதற்காக அதிகம் கூட்டம் உள்ள இடங்களுக்கு தவிர்க்க முடியாத காரணங்களாக செல்லும் பொதுமக்கள் இரண்டு முக கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும் என்றும் கிருமி நாசினி மருந்துகளை பயன்படுத்தி கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலிமூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்
இன்று புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் காய்கறி மார்க்கெட்டில் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள காணொளியை எல்இடி திரையில் ஒளிபரப்பி முகக்கவசம் எவ்வாறு அணிய வேண்டும் என்பது குறித்து காணொலியை மக்கள் தொடர்பு துறையின் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர் காய்கறி மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்களும் தமிழக முதல்வர் பேசிய காணொலியை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்