/* */

முதல்வர் உண்மையான விவசாயி அல்ல- கார்த்தி சிதம்பரம்

முதல்வர் உண்மையான விவசாயி அல்ல- கார்த்தி சிதம்பரம்
X

தமிழக முதல்வர் ஒரு உண்மையான விவசாயி அல்ல என ஆலங்குடியில் கார்த்தி சிதம்பரம் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பேருந்து நிறுத்தத்தின் அருகே குடியரசு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேசியக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் கூறும் போது,

தான் ஒரு விவசாயி என்று கூறும் தமிழக முதல்வர் டெல்லி சென்ற போது ஏன் அங்கு போராடிய விவசாயிகளை சந்திக்கவில்லை. அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை, எனவே தமிழக முதல்வர் ஒரு உண்மையான விவசாயி அல்ல.திரையரங்குகளை திறக்கலாம் ஆனால் கிராம சபை கூட்டம் நடத்த கூடாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

Updated On: 26 Jan 2021 10:57 AM GMT

Related News