Begin typing your search above and press return to search.
ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழியர்கள் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்.
HIGHLIGHTS
மத்திய அரசு ஊதிய திருத்தம் செய்து ஊதிய உயர்வு வழங்க கோரி கடந்த 2ம்தேதி முதல் ஒரு வாரம் வரை கோரிக்கை அட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி இன்று பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களும் கருப்பு பேட்ச் மற்றும் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். நிகழ்வில் மாநில பொருளாளர் செ.அபிமன்னன் , மாவட்டத் தலைவர் அ.பழனிவேல் ராஜா , மாவட்ட செயலாளர். அருண்குமார், மாவட்ட பொருளாளர் கரும்பாயிரம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.