Begin typing your search above and press return to search.
காற்றில் பறந்த கொரோனா விதிமுறைகள் - ஒரே நேரத்தில் 13 திருமணங்கள்
கொரோனா தொற்று பரவல் உள்ள நிலையில் திருமண விழாவில் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் அலட்சியம்.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளும், வழிகாட்டுதலையும் அரசு வகுத்துள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருள்மிகு மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக்கோவில் வளாகத்தில் இன்று ஒரே நேரத்தில் 13 திருமணங்கள் நடைபெற்றது.
கொரோனா தொற்று பரவல் உள்ள நிலையில் திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் திருமணத்தில் கலந்து கொண்டனர். மேலும் விநாயகர் சதுர்த்தி யோடு- முகூர்த்த நாள் என்பதால் 13 திருமணங்கள் நடைபெற்றது. 13 திருமணங்கள் நடைபெற்றதால் 500க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கூடியதால் கொரோனா விதிமுறைகள் காற்றில் பறந்தது. மேலும் கரோனா தொற்று பரவல் சூழல் உருவாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.