நாமக்கல் நராட்சி முன்னாள் தலைவர் து.சு.மணியன் உருவப்படத்திற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மலர்தூவி அஞ்சலி

நாமக்கல் நகராட்சி முன்னாள் தலைவர் து.சுமணியன் வீட்டிற்கு வந்த, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், எம்.பி., அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
நாமக்கல்,
நாமக்கல் நகராட்சி முன்னாள் தலைவர் து.சு.மணியன் காலமாணதைத் தொடர்ந்து, அவரது வீட்டிற்கு வந்த, தமாகா தலைவர் வாசன் எம்.பி., அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
நாமக்கல் நகராட்சி முன்னள் தலைவரும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளருமான து.சு.மணியன் கடந்த ஏப்.23ம் தேதி காலமாணார். இதையொட்டி தமாகா தலைவர் ஜிகே வாசன் நேற்று நாமக்கல், காந்தி நகரில் உள்ள மணியன் வீட்டிற்கு வருகை தந்தார். அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய வாசன், மணியனின் மனைவி சாரதா, மகன் சுரேஷ்குமார் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். தமாகா கிழக்கு மாவட்ட தலைவர் கோஸ்டல் இளங்கோ, மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார், பொருளாளர் சுப்பிரமணியன், நாமக்கல் மாநகரத் தலைவர் சக்தி வெங்கடேஷ், வட்டார தலைவர்கள் சின்னசாமி, ராமன், மாவட்டத் துணைத் தலைவர் ராமலிங்கம், சேலம் மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார், வக்கீல் செல்வம் உள்ளிட்ட திரளான தமாகா நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu