சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது : NEET தேர்வு முடிவுகளுக்கு தடை

சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது : NEET தேர்வு முடிவுகளுக்கு தடை
சென்னை: கடந்த மே 4ஆம் தேதி நடைபெற்ற நீட் (NEET) இளங்கலை தேர்வு முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதில், மின் தடையால் பாதிக்கப்பட்டு தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த வேண்டும் எனக் கோரி வழக்கு தொடரப்பட்டது. குறித்த சம்பவம், ஆவடியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்தது, அங்கு கனமழையினால் 1.15 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இந்த நேரத் தடை காரணமாக, அந்த பள்ளியில் தேர்வு எழுத முடியாத 13 மாணவர்கள், தனித்தனி முறையில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இதனைப்பற்றி விசாரணை நடத்திய நீதிமன்றம், தற்போது அந்த தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு, பல மாணவர்களுக்கும், தேர்வு நடைமுறை தொடர்பாக புதிய கட்டமைப்பை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu