"மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம் 13ல் 60 கிராம பஞ்சாயத்தில் தொடக்கம்..!
நாமக்கல்:
'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் மூன்றாம் கட்டம், வரும், 13ல், 60 கிராம பஞ்சாயத்துகளில் தொடங்குகிறது' என, கலெக்டர் உமா பேசினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், ஆதிதிராவிடர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மூன்றாம் கட்டமாக, கிராம பஞ்சாயத்துகளில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின், 3ம் கட்ட சிறப்பு முகாம் நடப்பது தொடர்பாக முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் உமா தலைமையில் ஆலோசனை
கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதா-வது: தமிழகத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்டம், நகராட்சி, டவுன் பஞ்சாயத்து பகுதிகளுக்கு, 2023 டிச., 18ல், கோவையிலும், 2024 ஜூலை, 11ல், 'ஊரக பகுதியில் மக்களுடன் முதல்வர்' திட்டம், தர்மபுரியிலும், முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
60 கிராம பஞ்சாயத்துகளில் 3ம் கட்ட முகாம்
தற்போது, மூன்றாம் கட்டமாக, ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில், ஆதிதிராவிடர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள, 60 கிராம பஞ்சா-யத்துகளில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாம், வரும், 13 முதல், மார்ச், 7 வரை நடக்கி-றது.
பெறப்படும் மனுக்கள் மீது 1 மாதத்தில் தீர்வு
முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது, ஒரு மாத காலத்தில் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில், இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அதில், பல்வேறு துறைகள் சார்ந்த விண்ணப்பங்கள் பெறப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
பலர் பங்கேற்பு
ஆர்.டி.ஓ., பார்த்திபன், பஞ்., உதவி இயக்குனர் ரவிச்சந்திரன், தனித்துணை கலெக்டர் பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu