/* */

பெட்ரோல், டீசல் விலையை உயர்வு கண்டித்து நாகையில் விவசாயிகள் நூதன போராட்டம்

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து, நாகையில் வயலில் டிராக்டரை கயிறு கட்டி இழுத்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து, நாகையில் வயலில் டிராக்டரை கயிறு கட்டி இழுத்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வெகுவாக உயர்த்தும் மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. அதன்படி, இன்று நாகையில் எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை செல்லூர் கிராமத்தில் பாசன வயலில் டிராக்டருக்கு டீசல் வாங்கி உழவுப் பணியை துவங்க முடியாததை உணர்த்தும் வகையில் டிராக்டரை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் காவிரி விவசாயிகள் ஈடுபட்டனர். அப்போது, பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 30 Jun 2021 2:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்