பெட்ரோல், டீசல் விலையை உயர்வு கண்டித்து நாகையில் விவசாயிகள் நூதன போராட்டம்
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து, நாகையில் வயலில் டிராக்டரை கயிறு கட்டி இழுத்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து, நாகையில் வயலில் டிராக்டரை கயிறு கட்டி இழுத்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வெகுவாக உயர்த்தும் மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. அதன்படி, இன்று நாகையில் எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை செல்லூர் கிராமத்தில் பாசன வயலில் டிராக்டருக்கு டீசல் வாங்கி உழவுப் பணியை துவங்க முடியாததை உணர்த்தும் வகையில் டிராக்டரை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் காவிரி விவசாயிகள் ஈடுபட்டனர். அப்போது, பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர்.