/* */

நாகூர் நாகநாதசாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா

நாகை அடுத்த நாகூர் நாகநாதசாமி கோவில் மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சி 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

நாகூர் நாகநாதசாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா
X

நாகூர் நாகநாதசாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா

நாகையை அடுத்த நாகூரில் புகழ்பெற்ற நாகநாதசாமி கோவில் அமைந்துள்ளது. ராகு, கேது பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிற இவ்வாலயத்தில் கடந்த 16 ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த 19-ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன், கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை, பூர்ணாஹுதி தீபாரதனை நடைப்பெற்றது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, கஜபூஜை, லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் இன்று காலை 5 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. சிறப்பு தீபாராதனைக்கு பின்னர், சிவ வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு சரியாக காலை பத்து மணிக்கு விமானங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

நாகநாத நாகவல்லி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீரை தலையில் தெளித்து மனமுருகி சிவனை தரிசனம் செய்தனர்

Updated On: 23 Jan 2022 7:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்