நாகூர் நாகநாதசாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா
நாகை அடுத்த நாகூர் நாகநாதசாமி கோவில் மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சி 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
HIGHLIGHTS
நாகையை அடுத்த நாகூரில் புகழ்பெற்ற நாகநாதசாமி கோவில் அமைந்துள்ளது. ராகு, கேது பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிற இவ்வாலயத்தில் கடந்த 16 ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த 19-ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன், கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை, பூர்ணாஹுதி தீபாரதனை நடைப்பெற்றது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, கஜபூஜை, லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் இன்று காலை 5 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. சிறப்பு தீபாராதனைக்கு பின்னர், சிவ வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு சரியாக காலை பத்து மணிக்கு விமானங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
நாகநாத நாகவல்லி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீரை தலையில் தெளித்து மனமுருகி சிவனை தரிசனம் செய்தனர்