மதுரை அருகே குற்றால அருவி போல கொட்டும் கழிவு நீர்: பொது மக்கள் அதிர்ச்சி

மதுரை அருகே குற்றால அருவி போல கொட்டும் கழிவு நீர்: பொது மக்கள் அதிர்ச்சி
X

 கழிவு நீர் வழிந்து வரும் ரயில்வே சுரங்கப்பாதை.

மதுரை அருகே குற்றால அருவி போல கொட்டும் கழிவு நீரால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில தினங்கள் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்தது. இதில், மதுரை புறநகர் பகுதிகளான திருப்பரங்குன்றம், விமான நிலையம், அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய 'கனமழை பெய்தது.

இந்த நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் மாநகராட்சி மண்டல அலுவலகம் 5-ன் அருகே உள்ள ரயில்வே சுரங்க பாதையில் சில நாட்களுக்கு முன்பு மழை நீர் தேங்கியிருந்ததில் அரசு பேருந்து பயணிகளுடன் சிக்கியது.

பின்னர், பேருந்ததில் இருந்து பயணிகளை இறக்கி விட்டு பின்னர் மீட்பு வாகனம் மூலம் பேருந்து தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டது.

இந்த நிலையில், ரயில்வே சுரங்கப்பாதையில் உள்ள சுவற்றில் இடையே இருந்து தேங்கி இருக்கும் மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து அருவியிலிருந்து நீர் வருவது போல் தண்ணீர் வருவது பார்ப்பவர்களை முகம் சுளிக்க செய்கிறது.

மேலும், பக்கவாட்டு சுவர்களில் தொடர்ந்து கழிவு நீர் வழிந்து வருவதால் ரயில்வே சுரங்கப்பாதை நாளடைவில் பலவீனமடைந்து இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், மதுரை மாநகராட்சி மண்டலம் 5 -அலுவலகம் அருகே இருக்கும் இந்த ரயில்வே சுரங்கப் பாதை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என பலமுறை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!