மதுரை அருகே பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை பொதுக்கூட்டம்

மதுரை அருகே பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க   தெருமுனை பொதுக்கூட்டம்
X

பா.ஜ.க. சாதனை விளக்க பொதுக் கூட்டம்.

மதுரை அருகே மேற்கு மாவட்டம் பகுதியில் திருமங்கலம் நகரில் பா.ஜ.க. அரசின் சாதனை விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

மதுரை: மதுரை மேற்கு மாவட்ட ம், திருமங்கலம் நகர் பா.ஜ.க. சார்பாக மத்திய அரசின் 9-ம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம், திருமங்கலத்தை அடுத்த சந்தைப்பேட்டையில் நடைபெற்றது .

இந்த கூட்டத்திற்கு நகரத் தலைவர் விஜயேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மதுரை மேற்கு மாவட்டத் தலைவர் சசிகுமார், மாநில பொருளாதாரப் பிரிவு தலைவர் எம். எஸ் .ஷா பொருளாதார பிரிவு நிரஞ்சன், மாவட்டச் செயலாளர்கள் சின்னசாமி, தமிழ்மணி, ஆன்மீகப் பிரிவு மாரிமுத்து, கூட்டுறவு பிரிவு முனியாண்டி ஆகியோர் அழைப்பாளர்களாக வந்திருந்தனர். சசிகுமார், மத்திய அரசு 9 ஆண்டுக்கான திட்டங்களை எடுத்துரைத்தார். மதுரை மாவட்ட எல்லைகளில் சட்ட விரோத மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. திமுக அரசு இதை கண்டுகொள்ளாமல் உள்ளது. என்று விமர்சித்தார்.

மண்டல நிர்வாகிகள் சக்திவேல்,தங்கம், நீலமேகம், சுந்தர்ராஜ், புஷ்பராஜ், மருதுபாண்டி, துரைமுருகன் ,செல்வ லட்சுமி , ரோஸ் லதா, இன்பராணி மாலா மற்றும் திருமங்கலம் நகர் பாஜகவினர் கலந்து கொண்டனர்.

எம்பி தேர்தல் வரும் 2024ம் ஆண்டு வரவுள்ளதால் அதற்கு முன்னேற்பாடாக பாஜக தமிழகத்தில் பாஜகவின் 9ஆண்டு கால சாதனைகளை பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முனைப்புக்காட்டி வருகிறது.

Tags

Next Story