/* */

சதுரகிரி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 29 -ம் தேதி வரை வனத்துறை அனுமதி

பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோவிலில் வரும் 29ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

HIGHLIGHTS

சதுரகிரி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 29 -ம் தேதி வரை வனத்துறை அனுமதி
X

மதுரை சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோவில் பாதை.

மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. சதுரகிரி வனப்பகுதியில் கோரக்கர், சட்டைமுனி போன்ற சித்தர்கள் தவம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. நாலாபுறமும் மலைகள் சூழ்ந்துள்ளதால் "சதுரகிரி" என அழைக்கப்படுகிறது.

ஒட்டு மொத்த மலைகளின் அமைப்பு, சதுர வடிவில் இருப்பதால் இப்பெயர் என்னும் ஒரு கருத்தும் நிலவுகிறது. சுந்தரமகாலிங்கம் சன்னதியில் மகாலிங்கம் சாய்ந்த நிலையில் உள்ளது இக்கோவிலின் சிறப்பு என்கின்றனர், பக்தர்கள்.

மலைக்கோவிலில் மாதம் தோறும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. நாளை (ஜூன் 26) ஆனிமாத பிரதோஷம், 28ம் தேதி ஆனி மாத அமாவாசையையொட்டி நாளை முதல் வரும் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினரும், கோவில் நிர்வாகத்தினரும் தெரிவித்துள்ளனர்.

Updated On: 25 Jun 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  4. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  5. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  6. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  7. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  10. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...