Begin typing your search above and press return to search.
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: கட்டிட மேஸ்திரி போக்சோவில் கைது
எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி காவேரிப்பட்டினம் பகுதியில் இருந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி, செல்சனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரியான பிரபு என்பவர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமித்ரா இன்று வழக்கு பதிவு செய்து பிரபுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.