/* */

பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா

பொன்னேரியில் பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு திருவிழா, விமரிசையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
X

பொன்னேரியில் பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

பொன்னேரியில் பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி திருவாயர்பாடியில் உள்ள கரி கிருஷ்ண பெருமாள் கோயில் சித்திரை பிரமோற்சவ விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவ முக்கிய நிகழ்வான பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திக்கும் நிகழ்ச்சி வெகுவிமர்சியாக நடைபெற்றது.


நிகழ்ச்சியின் முன்னதாக சுவாமிகளுக்கு அதிகாலை பால்,தயிர், சந்தனம்,இளநீர்,மஞ்சள், குங்குமம், தேன், ஜவ்வாது, பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும் திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஹரிஹரன் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் நிகழ்ச்சியை கண்டு பக்தி பரவசத்துடன்

கோவிந்தா, கோவிந்தா எனவும் ஓம் நமச்சிவாய என பக்தர்களின் கோஷம் விண்ணை பிளந்தது. இந்த சந்திப்பு திருவிழாவில் பொன்னேரி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஹரியையும், ஹரனையும் ஒருசேர தரிசித்தனர். பிரம்மோற்சவத்தின் ஒரு நிகழ்வாக தேர்திருவிழா நாளை நடைபெற உள்ளது. வேறெங்கும் நடைபெறாத அபூர்வ நிகழ்வாக பொன்னேரியில் இந்த சந்திப்பு திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 29 April 2024 5:01 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?