/* */

கிருஷ்ணகிரியில் தற்காலிக மருத்துவர்கள் மீண்டும் பணி வழங்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

கிருஷ்ணகிரியில் கொரோனா கால தற்காலிக மருத்துவர்கள் மீண்டும் பணி வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் இடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரியில் தற்காலிக மருத்துவர்கள் மீண்டும் பணி வழங்க  மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

கிருஷ்ணகிரியில் கொரோனா கால தற்காலிக மருத்துவர்கள் மீண்டும் பணி வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் இடம் மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொரோனா பேரிடர் சமயத்தில் பணியாற்றிய தற்காலிக மருத்துவர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தனர்.

அந்த மனுவில் கொரோனா பேரிடர் சமயத்தில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்காலிகமாக 52 மருத்துவர்கள் அரசால் நியமிக்கப்பட்டோம். தற்போது கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் 52 மருத்துவர்களும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

பணி இல்லாத காரணத்தால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம் ஆகவே எங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சுகாதார துறை அமைச்சரைச் சந்தித்து மருத்துவக் குழு பேச்சு வார்த்தை நடத்தியது அப்போது மீண்டும் வழங்க முதல்வர் அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு உள்ளார் எனவும் விரைவில் பணி உத்தரவு வரும் எனவும் தெரிவித்தார்.

ஆனால் இது நாள் வரை எங்களுக்குப் பணி வழங்கப்படவில்லை. ஆகவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக எங்கள் மனுவைப் பரிசீலனை செய்து எங்களுக்குப் பணி வழங்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.

Updated On: 27 Dec 2021 12:01 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
  5. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  7. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  10. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...