Begin typing your search above and press return to search.
கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கெலவரப்பள்ளி அணையில் அதிக அளவில் தண்ணீர் திறப்பால், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், நான்கு நாட்கள் பரவலாக மழை பெய்தது. மேலும் கர்நாடகா மாநிலத்திலும், தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்தது.
இதனால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று 696 கன அடியும், இன்று 610 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 39.03 அடியாக நீர்மட்டம் உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி வந்து கொண்டிருக்கும் தண்ணீரில் 400 கன அடி நீர், தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு இன்று நீர்வரத்து, 324 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் மொத்த உரமான, 52 அடியில், 46.30 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வாய்க்கால் மூலம், 12 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.