சின்னாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி: அணை நீரை திறக்க ஆட்சியரிடம் மனு
சின்னாறு ஆற்றின் குறுக்கே நடைபெறும் பாலம் கட்டுமான பணி தடைபடாமல் இருக்க அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் இடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் போகிபுரம் கிராம மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் இடம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், போகிபுரம் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தினர் அனைவரும் தங்களது அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் மற்றும் மாணவர்கள் கல்வி கற்பதற்கும் சின்னாறு ஆற்றைப் பரிசல் மூலம் கடந்து சூளகிரி செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் சின்னாறு ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்துத் தர கிராம மக்கள் சார்பில் கோரிக்கை வைத்த நிலையில் தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த கன மழையால் சின்னாறு குறுக்கே கட்டப்பட்டு உள்ள சின்னாறு அனை 75 சதவீதம் நிரம்பி உள்ளது. இதனால் பாலம் கட்டும் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆகவே சின்னாறு அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றியும், தற்காலிகமாக துரை ஏரியிலிருந்து சின்னாறு அணைக்கு வரும் தண்ணீரை தடுத்து நிறுத்தியும் பாலம் கட்டுமான பணியை மீண்டும் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.
மேலும் இரண்டு மாதங்களில் பாலம் கட்டும் பணி முடிவடைந்து விடும். அதனை தொடர்ந்து மீண்டும் வழக்கம் போல் சின்னாறு அணைக்கு தண்ணீர் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தனர்.