/* */

கரூரில் உள்ள வணிக வளாகத்தில் ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கரூரில் வணிக வளாகத்தில் உள்ள லிப்ட்டின் அருகில் உயிரிழந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

கரூரில் உள்ள வணிக வளாகத்தில் ஆண் சடலம்; போலீசார் விசாரணை
X

கரூர் வணிகவளாகத்தில் இறந்து கிடந்தவர்

கரூர் பேருந்து நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. 6 தளங்களை கொண்ட இந்த வணிக வளாகத்தில் 50 க்கும் அதிகமான கடைகள் உள்ளன.

இந்த வணிக வளாகத்தின் ஆறு தளங்களுக்கும் செல்வதற்கு லிப்ட் வசதி உள்ளது. இன்று லிப்ட்டின் அருகில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக கரூர் நகர காவல் நிலையப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக கிடந்தவர் கரூர் தாந்தோணிமலையை சேர்ந்த அருள்ராஜ் என்பதும் தச்சு வேலை பார்த்து வந்தவர் எனவும் தெரிய வந்தது.

அருள்ராஜின் இரு சக்கர வாகனம், வணிக வளாகத்தில் அருகில் தனியாக நின்று கொண்டிருந்தது. இதையடுத்து அருள்ராஜ் எதற்காக வணிக வளாகத்துக்கு வந்தார், தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் கரூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Updated On: 27 Jun 2021 12:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...