Begin typing your search above and press return to search.
கரூர் தளபதி கிச்சனில் 3 வேளை இலவச உணவு: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
கரூர் நகரில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் கொரோனா ஊரடங்கால் உணவு கிடைக்காமல் அவதியுறும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவு கிடைக்காமல் அவதிப்படும் ஏழை எளிய மக்களுக்காக கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் தளபதி கிச்சன் தொடங்கப்பட்டுள்ளது இங்கு மூன்று வேளையும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்றார்.