கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் திருவிழா!
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா நாளை தொடங்க இருக்கிறது. இதனால் கன்னியாகுமரியில் களைகட்டியுள்ளது.
HIGHLIGHTS
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா நாளை தொடங்க இருக்கிறது. இதனால் கன்னியாகுமரியில் களைகட்டியுள்ளது.
தமிழகத்தின் தென்கோடி முனையில் கம்பீரமாக அமர்ந்து மக்களைக் காத்தருளும் அம்மன் குமரியம்மன். இவருக்கு பகவதி அம்மன் என்று பெயர். இந்த கோவிலில் வைகாசி மாதம் நடைபெறும் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா புதன்கிழமை மே 24ம் தேதி துவங்குகிறது.
இதனையொட்டி நாகர்கோவில் கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மரபுப் படி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கன்னியாகுமரி விவேகானந்தபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னர் விவேகாந்தபுரம் சந்திப்பிலிருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலில் சமர்ப்பிப்பார்கள். அதன்பிறகு முறையாக திருவிழா தொடங்கும்.
இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியாக கிறிஸ்தவ மீனவர்கள் கொடிமர கயிற்றை மேள தாள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் ஒப்படைப்பார்கள். நாளை கொடியேற்றத்துடன் துவங்கும் விழா வரும் ஜூன் 2ம் தேதி நிறைவடைகிறது. மொத்தம் 10 நாட்களுக்கு இந்த விழா நடக்க இருக்கிறது.
தேரோட்டம் - ஜூன் 1
ஆராட்டு நிகழ்வு - ஜூன் ௨