/* */

தடையை மீறிய கடைகளுக்கு 30 ஆயிரம் அபராதம்

தடையை மீறிய கடைகளுக்கு 30 ஆயிரம்  அபராதம்
X

3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகள் செயல்பட தமிழக அரசு தடை விதிக்கப்பட்ட நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் தடையை மீறி கடைகள் செயல்படுவதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இந்த புகாரைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் IAS உத்தரவின் பேரில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் மேற்பார்வையில் மாநகராட்சி சுகாதாரத் துறை, வருவாய் துறை, நகரமைப்புத் துறை ஆகிய மூன்று பிரிவுகளைச் சார்ந்த அதிகாரிகள் தலைமையில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அரசின் தடையை மீறி 3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகள் மறைமுகமாக செயல்பட்டது தொடந்து அந்த கடைக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதே போன்று, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்பட்ட கடைகள் மற்றும் முகக் கவசம் அணியாமல் வாடிக்கையாளர்களை அனுமதித்த கடைகளுக்கு ரூபாய் 30,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனா பரவலை தடுக்க அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள மாநகராட்சி ஆணையர் அரசின் தடையை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Updated On: 7 May 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு