காஞ்சிபுரம் ஸ்ரீ யதோத்காரி பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா
காஞ்சிபுரம் ஸ்ரீ கோமளவல்லி தாயார் சமேத ஸ்ரீ யதோத்காரி பெருமாள் திருக்கோயில் பங்குனி பிரமோற்சவ விழாவில் கருடவாகனத்தில் பெருமாள் வீதி உலா
HIGHLIGHTS
காஞ்சிபுரம் ஸ்ரீ கோமளவல்லி தாயார் சமேத ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவம் திருவிழா கருடவாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்தார்.
108 திவ்யதேசத்தில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீ கோமளவல்லி தாயார் சமேத ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவம் திருவிழா கடந்த 25ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து இன்று ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பல்வேறு வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.வழியெங்கும் பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
இவ்விழாவில் பொது மக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர். வழியெங்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இம்மாதம் 31ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா நல்லப்பா நாராயணன் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.