Begin typing your search above and press return to search.
சின்னசேலம் அருகே மூங்கில்பாடி பிரிவிலுள்ள மின்கம்பம் சீரமைக்கப்படுமா?
மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னசேலம் அடுத்த பாண்டியன்குப்பம் கிராமத்தில் மூங்கில்பாடி பிரிவு சாலை அருகே ஒரு மின் கம்பம் பல மாதங்களாக சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால், மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்த்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இதனால், இவ்வழியே செல்வோர் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே, சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.