கூடுதல் விலைக்கு உரம் விற்பனை: புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உர விற்பனை செய்பவர்கள் குறித்து புகாரை வேளாண் துறையின் குறைகேட்பு மைய தொடர்பு எண்ணில் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டு சரியான விலையில் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அனைத்து உர விற்பனையாளர்களும் உர மூட்டைகளில் அச்சிடப்பட்ட அதிகபட்ச விலையைவிட அதிகமான விலைக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது.
கூடுதல் விலைக்கு உர விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் குறித்த புகார்களை தெரிவித்திட மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் புதியதாக குறைகேட்பு பிரிவு மையம் துவங்கப்பட்டுள்ளது.
இக்குறைகேட்பு பிரிவு அலுவலக நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணிவரை செயல்படும். புகார்களை 04151-291335 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். அதன்படி, கள்ளக்குறிச்சி 94438 41066, சின்னசேலம் 94860 12682, சங்கராபுரம் 82481 10335, ரிஷிவந்தியம் 99406 69943, தியாகதுருகம் 96008 70410, திருக்கோவிலுார் 94506 82505, உளுந்துார்பேட்டை 88254 57582, திருநாவலுார் 86101 87822 மற்றும் வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) 94438 44332 ஆகிய எண்களில் குறுஞ்செய்தியாகவோ அல்லது அலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.