கோபி அருகே மின்வாரிய அலுவலர் வீட்டில் 3½ பவுன் நகை கொள்ளை

கோபி அருகே மின்வாரிய அலுவலர் வீட்டில் 3½ பவுன் நகை கொள்ளை
X

நகை கொள்ளை (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் கோபி அருகே மின்வாரிய அலுவலர் வீட்டில் 3½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோபி அருகே மின்வாரிய அலுவலர் வீட்டில் 3½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பொலவகாளிபாளையம் செந்தூர்நகரை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவரது மனைவி கிருத்திகா (வயது 36). இவர், கோபி வேட்டைக்காரன் கோவில் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், விக்னேஸ்வரன் உத்திரபிரதேசத்தில் நடக்கும் கும்பமேளாவிற்கு சென்றுள்ளார். கிருத்திகா வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு அன்று மாலை அலுவலகத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வீட்டின் கதவு திறந்த நிலையில் இருப்பதாக அருகில் இருந்தவர்கள் கிருத்திகாவிற்கு தகவல் தெரிவித்தனர். உடனே கிருத்திகா வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 2½ பவுன் செயின், ¾ பவுன் கம்மல், 50 கிராம் வெள்ளி கொலுசு மற்றும் லேப்டாப் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து கிருத்திகா கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீசார் திருட்டு நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
Similar Posts
பெருந்துறையில் ரூ.2.19 கோடிக்கு கொப்பரை ஏலம் போனது..!
மது விற்ற 5 பேர் கைது..!
நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு
பெருந்துறை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்தில் 2 பேர் பலி: 20க்கும் மேற்பட்டோர் காயம்; நிவாரணம் அறிவிப்பு
சத்தியமங்கலத்தில் கிடுகிடுவென உயர்ந்த மல்லிகை பூ விலை..! கிலோ எவ்வளவு தெரியுமா?
கோபி சந்தையில் செவ்வாழைத் தார் ரூ.1300க்கு விற்பனை..!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் வரும் 8ம் தேதி ரேஷன் குறைதீர் முகாம்
புத்தகத் திருவிழா பெயரில் கட்டாய வசூல் – ஆசிரியர் மன்றத்தின் கடும் கண்டனம்
கோபி அருகே மின்வாரிய அலுவலர் வீட்டில் 3½ பவுன் நகை கொள்ளை
பெருந்துறையில் ரூ.900 கோடியில் மில்கி மிஸ்ட் தொழிற்சாலை விரிவாக்கம்: கூடுதலாக 450 பேருக்கு வேலைவாய்ப்பு
பவானி அம்மாபேட்டையில் நவீன இயந்திரங்களால் மின்னல் வேகத்தில் நெல் அறுவடை..!
குமாரபாளையம் பள்ளியில் முன்னாள் மாணவர்களின் உதவி: 40 நாற்காலிகள் வழங்கும் விழா
பெருந்துறை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அமைச்சர் ஆறுதல்