பெருந்துறை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்தில் 2 பேர் பலி: 20க்கும் மேற்பட்டோர் காயம்; நிவாரணம் அறிவிப்பு

பெருந்துறை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்தில் 2 பேர் பலி: 20க்கும் மேற்பட்டோர் காயம்; நிவாரணம் அறிவிப்பு
X

விபத்து முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பெருந்துறை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலை, செங்காளிபாளையம் கிராமம் சாம்ராஜ்பாளையம் பிரிவில் இன்று (பிப்ரவரி 6ம் தேதி) காலை சுமார் 8.45 மணியளவில் திருப்பூரிலிருந்து ஈரோடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த TN‌ 34 T 4050 என்ற பதிவெண் கொண்ட தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே திசையில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியைக் கடந்து செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், பேருந்தில் பயணம் செய்த திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம். விருமாண்டம்பாளையம், தில்லை நகரைச் சேர்ந்த பெரியசாமி (வயது 19 மற்றும் குன்னத்தூர் கிராமம், சுண்டக்காம்பாளையத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (வயது 19) ஆகிய இரண்டு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும். அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
Similar Posts
பெருந்துறையில் ரூ.2.19 கோடிக்கு கொப்பரை ஏலம் போனது..!
மது விற்ற 5 பேர் கைது..!
நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு
பெருந்துறை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்தில் 2 பேர் பலி: 20க்கும் மேற்பட்டோர் காயம்; நிவாரணம் அறிவிப்பு
சத்தியமங்கலத்தில் கிடுகிடுவென உயர்ந்த மல்லிகை பூ விலை..! கிலோ எவ்வளவு தெரியுமா?
கோபி சந்தையில் செவ்வாழைத் தார் ரூ.1300க்கு விற்பனை..!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் வரும் 8ம் தேதி ரேஷன் குறைதீர் முகாம்
புத்தகத் திருவிழா பெயரில் கட்டாய வசூல் – ஆசிரியர் மன்றத்தின் கடும் கண்டனம்
கோபி அருகே மின்வாரிய அலுவலர் வீட்டில் 3½ பவுன் நகை கொள்ளை
பெருந்துறையில் ரூ.900 கோடியில் மில்கி மிஸ்ட் தொழிற்சாலை விரிவாக்கம்: கூடுதலாக 450 பேருக்கு வேலைவாய்ப்பு
பவானி அம்மாபேட்டையில் நவீன இயந்திரங்களால் மின்னல் வேகத்தில் நெல் அறுவடை..!
குமாரபாளையம் பள்ளியில் முன்னாள் மாணவர்களின் உதவி: 40 நாற்காலிகள் வழங்கும் விழா
பெருந்துறை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அமைச்சர் ஆறுதல்