ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் ஆய்வு!
ஈரோடு : ஈரோடு பி.பி. அக்ரஹாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் நோக்கம்
ஈரோடு மாநகராட்சி 7வது வார்டுக்குட்பட்ட பி.பி. அக்ரஹாரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, சுகாதார நிலையத்தில் உள்ள காய்ச்சல் சிகிச்சை பிரிவு, கர்ப்பிணிகள் பரிசோதனை பிரிவு, கவனிப்பு பிரிவு போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின், பணியாளர்களின் வருகைப் பதிவேடு, உள் மற்றும் புறநோயாளிகள் சிகிச்சை விவர பதிவேடுகள், மருந்துகள் இருப்பு பதிவேடு போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, அதன் விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
சுகாதார நிலையத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என்றும், தினமும் வருகை தரும் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்றும் மருந்துகள் தேவையான அளவிற்கு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆணையர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu