/* */

தேசிய விளையாட்டு தினம்: விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது

HIGHLIGHTS

தேசிய விளையாட்டு தினம்: விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
X

திண்டுக்கல்லில் நடைபெற்ற தேசிய விளையாட்டு தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள்.

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. தேசிய ஹாக்கி விளையாட்டு வீரர் தயான் சந்த் பிறந்தநாள் விழா கோப்பைக்கான கால்பந்து, ஹாக்கி காட்சி போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது மாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு, 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்ற முதல் மூன்று வீரர் வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். கால்பந்து ஹாக்கி போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் இரு அணிகளுக்கு அணிகளுக்கு தயான்சந்த் பிறந்தநாள் கோப்பை வழங்கப்பட்டன. விளையாட்டுப் போட்டிகளில் ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி செய்திருந்தார்.

Updated On: 29 Aug 2021 7:35 AM GMT

Related News