திண்டுக்கல் அருகே வீட்டில், நகை கொள்ளை!
திண்டுக்கல் அருகே வீட்டில், நகை கொள்ளை!
HIGHLIGHTS
வேடசந்தூரில் பைனான்சியர் வீட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை
திண்டுக்கல், வேடசந்தூர் அடுத்துள்ள ரெங்கநாதபுரத்தை சேர்ந்த வேலுச்சாமி(75). இவர், குடும்பத்துடன் ஆந்திராவில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இதனால், வீட்டை பூட்டிவிட்டு அங்கேயே தங்கியிருந்தனர். எப்போதாவது விடுமுறைக்கு மட்டுமே இங்கு வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று இரவு இவரது வீட்டின் கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்து பீரோவையும் உடைத்து அதிலிருந்த தங்கம், வெள்ளி நகைகளையும், ரொக்க பணத்தையும் அள்ளிச் சென்றனர்.
இதனையடுத்து, மாடியில் குடியிருந்த நர்சு வீட்டிற்குள்ளும் கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால், அங்கு எதுவும் சிக்கவில்லை. பின்னர் அருகில் இருந்த மற்றொரு வீட்டின் வாசலில் கட்டியிருந்த 2 சேவல்களையும் திருடிக்கொண்டு அக்கும்பல் தப்பியோடினர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் பேருந்து நிலையம் எம்ஜிஆர் சிலை அருகே பாரதிய ஜனதா கட்சி சார்பாக, மாவட்டத் தலைவர் தனபாலன், மாவட்ட இளைஞரணி தலைவர் அன்பு ஹரிகரன், மாவட்ட பட்டியல் அணி தலைவர் இளையராஜா உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கொடியேற்ற முயற்சி நடந்தது. ஆனால், காவல்துறை அனுமதி இல்லை என்று கூறியதால், சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
காவல் துறையினர், பாரதிய ஜனதா கட்சியினரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.