/* */

தர்மபுரி அருகே கட்டட மேஸ்திரியிடம் ரூ.60 ஆயிரம் அபேஸ்

தர்மபுரி அடுத்த ஒட்டப்பட்டி பகுதியில் கட்டட மேஸ்திரியிடம் ரூ.60 ஆயிரம் பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

தர்மபுரி அருகே கட்டட மேஸ்திரியிடம் ரூ.60 ஆயிரம் அபேஸ்
X

ஒட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி நடராஜன்(55). இவர், ஒட்டப்பட்டி அருகே சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இதற்காக, ஒட்டப்பட்டியில் இயங்கும் தேசிய மய வங்கி ஒன்றின் கிளையில் வங்கிக் கடன் பெற்றுள்ளார்.

இந்த கடன் தொகை இவரது வங்கி சேமிப்புக் கணக்கில் உள்ளது. அதில் இருந்து, கட்டுமான செலவுக்காக ரூ.60 ஆயிரம் பணம் எடுத்துள்ளார். பணத்துடன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்து வந்த இருவர் வழியில் ஓரிடத்தில், பணம் கீழே விழுந்து விட்டதாகக் கூறி கவனத்தை திசை திருப்பி உள்ளனர்.

உடனே வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கிய நடராஜன் பணத்தை தேடியுள்ளார். இந்த தருணத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் அவரது வண்டியில் இருந்த பணம் வைக்கப்பட்டிருந்த பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். தனது இருசக்கர வாகனத்தில் உடனே அவர்களை விரட்டிச் சென்றபோதும் நடராஜனால் அவர்களை பிடிக்க முடியவில்லை.

இந்த சம்பவம் குறித்து அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் நடராஜன் புகார் அளித்தார். புகாரின் பேரில், பணம் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On: 14 Dec 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்